என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக முதலமைச்சர்"
- சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
- அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், நல்லக்கண்ணு உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
- உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
கலை கல்லூரி சிறப்பாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இன்றைய நாள் பெருமை கொள்ளத்தக்க நாள்.
கல்லூரியை கட்ட சொன்னால் ஒரு பல்கலைக்கழகத்தையே கட்டியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.
கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் கட்டிக் கொடுத்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
கொளத்தூர் தொகுதிக்கு வந்து உங்களுக்காக உழைப்பதுதான் உற்சாகம். உங்களை வந்து பார்த்தால் பூஸ்ட் ஆகிவிடுவேன்.
கொளத்தூர் தொகுதி அனைத்து நல்லதிட்டங்களுக்குமான மாடலாக திகழ்கிறது.
கல்விதான் கடவுள். அதுதான உங்களுக்கு நிறைய கொடுக்கும். அதனால், நன்றாக படியுங்கள்.
உங்களுக்கு இது பிப்ரவரி மாதம். திமுகவுக்கு இது மாநாடு மாதம்.
மாணவ, மாணவியர் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணல் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அப்போது அங்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- திராவிட மாடல் ஆட்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:-
என் பேச்சில் தெளிவாக சொல்லி உள்ளேன். மதசார் பின்மை, சோசலிசம் பாசிசத்தை எதிர்க்கணும் இதுதான் திராவிட மாடல். எல்லோருக்கும் எல்லாம் என்ற எங்கள் கொள்கையை வழிவகுத்து கொண்டு எங்களது திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.
கேள்வி:-பா.ஜ.க. அந்த மாடலை பின்பற்றவில்லை என்று சொல்கிறீர்களா? அவர்களது கூட்டணி கட்சி கூட திராவிட மாடல்தான் பண்ணுவதாக கூறுகிறார் களே?
பதில்:- நிச்சயமாக இல்லை. அதை உறுதியாக சொல்கிறேன். பயன்படுத்தி கொள்கிறார்கள். அவ்வளவுதான்.
போர்வையை போர்த்திக் கொண்டு உள்ளுக்குள் என்ன செய்யணுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- பலமுனை போட்டி களத்தில் இருக்கிறது என்கிறார்கள்? நீங்கள் பலமுனை போட்டியாக பார்க்கிறீர்களா? அப்படி வந்தாலும் அது உங்களுக்கு சாதகமா? எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:-நிச்சயமாக பல முனை போட்டி இருக்கலாம். ஆனால் பலம் பொருந்திய போட்டியாக இல்லை அது.
கேள்வி:- பிரதமர் மோடி 3 முறை இந்த மாதம் வரப்போகிறார். பா.ஜ.க. ரொம்ப தீவிரமாக இருக்கிறது தமிழ்நாட்டில் அவர்கள் கூட்டணியை வெற்றி பெற வைப்பதற்கு? இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- நான் அடிக்கடி சொல்வதுதான் பிரதமர் அடிக்கடி வர வேண்டும். அமித்ஷா அடிக்கடி வர வேண்டும். இந்த கவர்னரை மாற்றக் கூடாது. இதுவே எங்களுக்கு பெரிய பிரசாரம்.
கேள்வி:- மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தி ருக்கிறீர்கள். இது மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்கிறது. இதை உங்களது கடமை என்று நினைக்கிறீர்களா? அல்லது தேர்தலுக்கான விளையாட்டா?
பதில்:-தொடக்கத்திலேயே இதற்கு நான் விளக்கம் கொடுத்தேன். இதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:- இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று மணிசங்கர் அய்யர், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலரும் சொல்கிறார்களே? அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா?
பதில்:- தலைவர் கலைஞர் ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறார். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்.
கேள்வி:- சட்டசபை தேர்தல் வெற்றி எப்படி அமையும்?
பதில்:- தமிழ்நாட்டில் 2026 தேர்தல் என்பது ஜன நாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயான தேர்தல். என்.டி.ஏ.-தமிழ்நாடு இடையேயான தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
- மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை.
மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. அடுத்த 2 மாதங்களுக்கு உங்களுக்கும் சரி எனக்கும் சரி No Rest. வாக்குபதிவு அன்று பூத்துக்கு வந்து வாக்காளர்கள் நமக்கு வாக்கு செலுத்தும் வரை ஓய்வே இருக்க கூடாது!
மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் தரவில்லை? என பிரதமர் மோடியிடம் கேளுங்க.
மார்ச் 1ம் தேதி வருகை தரவுள்ள பிரதமரிடம், மதுரைக்கு ஏன் மெட்ரோ ரெயில் திட்டம் தரவில்லை? என மக்கள் கேட்க வேண்டும்.
மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
- கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளததை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஆளும் கட்சி யான தி.மு.க. மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு மாநாடுகள், தேர்தல் சந்திப்பு கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
தி.மு.க. சார்பில் தொடர்ந்து தஞ்சையில் மகளிர் அணி மாநாடு, தாம்பரம், திருப்பத்தூரில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டங்கள், விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி மாநாடு என நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டங்களில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மதுரையில் இன்று மாலை 5 மணிக்கு தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு தொடங்கியுள்ளது.
மாநாட்டிற்கு திறந்தவெளி வாகனத்தில் வருகை தந்த முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றியதாவது:-
வீரம் என்றால் மதுரை, பாசம் என்றால் மதுரை, கோவில் என்றால் மதுரை, சாப்பாடு என்றால் மதுரை, இங்கு எல்லாமே பேமஸ் தான் சித்திரைத்திருவிழா போல கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைகிறேன், இனி நாமதான், எப்போதுமே நாமதான்!
கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்வேறு மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது. இந்த மாநாடுகள் எல்லாம் "வெறும் ட்ரெய்லர்தான்; மெயின் பிக்சர் திருச்சியில் இருக்கிறது".
அடுத்த 2 மாதங்களுக்கு நமக்கு ஓய்வே கிடையாது. "ஒன்றிய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்!"
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
- போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் திமுக அரசை விமர்ச்சி "தோல்வி அடைய வாழ்த்துகள்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?
ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!
இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.
நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.
விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான
அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.
அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.
7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... மு.க.ஸ்டாலின்
(ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!)
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வலிமையான - உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம்.
- மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்ப்போம்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களையும் உரிமைகளையும் பெற்றுத்தந்து, வலிமையான - உண்மையான கூட்டாட்சி இந்தியாவைக் கட்டமைப்போம்!
மாநில சுயாட்சிக் கருத்தியலின் தேவையை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்து, எண்ணங்களால் ஒன்றிணைத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
- எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950 மற்றும் 1960 களில் முன்னணி நாயகியாக விளங்கினார்.
ரத்தக் கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறை பணியை தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார்.
இவர் 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கி மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அவருக்கு 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்கு விருதுடன் ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்தி நாதன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், எம்.என்.ராஜம் மற்றும் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
- இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான, மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
குடியுரிமை (அ) நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.
இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்று அறிவித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து, நேரில் வந்து நலம் விசாரித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து எச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் T.R.பாலு MP அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் H.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு.T.R.பாலு MP அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தியுள்ளார்.
- கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
எதிர்பாராத இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், தோல்வி பயத்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வழங்கவில்லை.
கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை" என்றார்.
- பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள்.
- ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்துவராது என முதலமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார்.
முதல்வரின் கருத்தால் திமுக கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை உள்ளது, கட்சியின் தலைவர் என்ற முறையில் கருத்து கூறியுள்ளார் முதல்வர்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறியுள்ளார், இதனால், கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள். பிளவுபடுத்தியே பழக்கப்பட்ட பாஜகவினர் பிளவு என்று தான் பேசுவார்கள். ஒரிசா, பீகார், மலேசியா என்று ஊருக்கு ஏற்ப பாஜகவினர் பேசுவார்கள்.
காங்கிரசாரிடம் எந்த கலக்கமும் இல்லை, நாங்கள் இந்த மண்ணை நேசிப்பவர்கள், விரைவில் முதல்வரை சந்திப்போம்.
தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகு விரைவில் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணிக்கம் தாகூர் தொடர்பான கேள்விக்கு எங்களுக்குள் உள்ள பிரச்சனையை நாங்கள் பேசி தீர்வு காண்போம் என பதில் அளித்தார்.






