செய்திகள்

திருவையாறு அருகே வாகன சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்

Published On 2017-08-21 10:53 GMT   |   Update On 2017-08-21 10:53 GMT
திருவையாறு அருகே வாகன சோதனையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ(வயது 56). இவர் சம்பவத்தன்று திருவையாறு கீழவீதியில் உள்ள அடகு கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றுவிட்டான்.

இது பற்றி ராஜூ திருவையாறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திருவையாறு காவேரி பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்த ராமு என்பவரது மகன் சூர்யா(20) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு போன ராஜூவின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சூர்யாவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் திருவையாறு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News