செய்திகள்

தேவர்குளம் அருகே வீடு புகுந்து 14 பவுன் நகை திருட்டு

Published On 2017-08-21 10:24 GMT   |   Update On 2017-08-21 10:24 GMT
தேவர்குளம் அருகே வீடு புகுந்து 14 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டியை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அப்போது யாரோ மர்ம நபர்கள் செந்தூர்பாண்டியின் வீட்டை திறந்து அங்கிருந்த 14 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.

இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம். இதுபற்றி செந்தூர்பாண்டியின் மனைவி சுப்புலட்சுமி (26) தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரில், தனது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த ராசு, செந்தில் ஆகியோர்தான் நகையை திருடியிருக்ககூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News