செய்திகள்

கும்பகோணத்தில் அரசு ஊழியர் திடீர் மாயம்

Published On 2017-08-21 10:24 GMT   |   Update On 2017-08-21 10:24 GMT
கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் மாயமானது குறித்து அவரது மனைவி கும்பகோணம் போலீசில் புகார் செய்துள்ளார்.

கும்பகோணம்:

கும்பகோணம் மேலக்காவிரி புதுத்தெரு ராம் நகரை சேர்ந்தவர் கோபு (வயது 41). இவருக்கு மங்கையர்க்கரசி (39) என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார்கள். கோபுவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது.

ஆனால் தான் படித்த படிப்பிற்கக்கேற்ற வேலை கிடைக்க வில்லையே என அவர்அடிக்கடி மன உளைச்சலாகி மருத்துவ விடுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கோபு கடந்த 10.12.2016 அன்று வெளியில் சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் இது நாள் வரை வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது மனைவி மங்கையர்க்கரசி கோபுவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News