செய்திகள்

பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2017-08-21 07:08 GMT   |   Update On 2017-08-21 07:08 GMT
பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி, சங்கர்நகர் காந்தி தெருவில் வசித்து வருபவர் நிர்மலா. இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை நிர்மலாவின் வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நிர்மலாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த ரூ. 22 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப் பொருட்களை காணவில்லை.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News