செய்திகள்

நெல்லை அருகே வீட்டு கதவை உடைத்து திருட முயன்றவர் கைது

Published On 2017-08-12 14:41 GMT   |   Update On 2017-08-12 14:41 GMT
நெல்லை அருகே பட்டப்பகலில் வீட்டு கதவை உடைத்து திருட முயன்றவரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் அருமை யோவான். இவரது மனைவி மல்லிகா(வயது 40). இவர்கள் இருவரும் நேற்று வெளியில் சென்றிருந்தனர். பின்பு அருமை யோவான் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது பட்டப்பகலில் அவரது வீட்டு கதவை மர்ம நபர் உடைத்து உள்ளே செல்ல முயன்றார்.

இதை பார்த்த யோவான் திருடன் திருடன் என சத்தம்போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்பு அவரை மானூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த ஈசாக்கு என்பதும், பிரபல கொள்ளையன் என்றும் தெரியவந்தது.  

இதையடுத்து ஈசாக்கை போலீசார் கைது செய்தனர். கைதான ஈசாக்கு பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News