செய்திகள்

கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-08-11 10:29 GMT   |   Update On 2017-08-11 10:29 GMT
வில்லியனூரில் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் புதுநகரை சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே கீதா அதே பகுதியில் தீபாவளி ஏல சீட்டில் சேர்ந்து சீட்டு நடத்துபவரிடம் பணம் கடன் வாங்கினார். மேலும் குடும்ப செலவுக்கு பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு கீதாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதனால் மனம் உடைந்த கீதா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், ஏட்டு கோதண்டபாணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News