செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் டி.டி.வி.தினகரன் பேரவை டிஜிட்டல் பேனர் கிழிப்பு

Published On 2017-08-03 12:36 GMT   |   Update On 2017-08-03 12:36 GMT
ஸ்ரீவைகுண்டத்தில் டி.டி.வி.தினகரன் பேரவை டிஜிட்டல் பேனரை மர்ம நபர்கள் கிழித்து விட்டனர். இன்று காலை இதனை பார்த்த பேரவை நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் டி.டி.வி.தினகரன் பேரவை சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடை பெறவுள்ளது.

இதற்காக பேரவை மாவட்ட செயலாளர் மாரியப்பன் சார்பில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 7 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெரும்பத்து பகுதியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் கிழித்து விட்டனர். இன்று காலை இதனை பார்த்த பேரவை நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாரியப்பன் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் டிஜிட்டல்பேனரை சேதப்படுத்தியவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News