செய்திகள்

நெட்டப்பாக்கம் அருகே திருமணம் நிச்சயம் செய்த இளம்பெண் மாயம்

Published On 2017-07-29 11:38 GMT   |   Update On 2017-07-29 11:38 GMT
நெட்டப்பாக்கம் அருகே திருமணம் நிச்சயம் செய்த இளம்பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே வடுகுப்பம் பெரு மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மகள் விஜயசாந்தி (வயது 24). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் திருபுவனையில் உள்ள தனியார் மாத்திரை தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திரு மண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இந்த திருமணத்தில் விஜயசாந்திக்கு விருப் பம் இல்லை என்று கூறப் படுகிறது.

இந்த நிலையில் சம்ப வத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற விஜயசாந்தி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் விஜயசாந்தி இல்லை.

இதையடுத்து விஜய சாந்தியின் அண்ணன் யுவராஜ் இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

புதுவை சண்முகாபுரம் சோனியாகாந்தி நகர் என்.ஆர். தெருவை சேர்ந்தவர் தீனதயாளன் வெல்டர். இவரது மகள் நிவேதா (19). இவர், குரும்பாபேட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற் சாலையில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிவேதா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து நிவேதா மாயமானது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் பில்டர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான நிவேதாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News