செய்திகள்

திருபுவனை அருகே கூலித்தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2017-07-27 14:42 GMT   |   Update On 2017-07-27 14:42 GMT
திருபுவனை அருகே பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருபுவனை:

திருபுவனை அருகே மாங்குப்பம் பாதையில் உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பூஞ்சாலை (வயது56), கூலித்தொழிலாளி. இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது.

இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூஞ்சாலைக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. இதனால் அவர் அவதி அடைந்து வந்தார். இந்த நோயினால் வீட்டில் உள்ளவர்களுக்கு கஷ்டத்தை கொடுப்பதைவிட தற்கொலை செய்து கொள்ள போவதாக பூஞ்சாலை அடிக்கடி கூறிவந்தார். அவரது மனைவி சகுந்தலா ஆறுதல் கூறி வந்தாலும் அவர் சமாதானம் அடையாத பூஞ்சாலை தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவரது மனைவி எழுந்து பார்த்த போது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவூதீன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News