search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருபுவனை"

    திருபுவனையில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்து போனார்கள். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே தமிழக பகுதியான மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ஜெயவர்தன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் விஜய் (23) திருமுருகன் (23), நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் புதுவை சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலை எதிரே வந்த போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக் கிள் மீது மோதியது.

    இதில், உடல் நசுங்கி ஜெய வர்தன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். படு காயம் அடைந்த விஜய் மற்றும் திருமுருகன் ஆகி யோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் விஜய் இறந்து போனார்.

    திருமுருகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே கணவரை பயமுறுத்த வி‌ஷம் குடித்த பெண் பரிதாபமாக இறந்து போனார்.

    திருபுவனை:

    கலிதீர்த்தாள்குப்பம் வி.வி. நகரை சேர்ந்தவர் அய்யனார். இவர் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி பழனியம்மாள் (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே அய்யனார் சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட போது கணவரை மிரட்ட பழனியம்மாள் வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) தின்றார்.

    இதில் மயங்கி விழுந்த பழனியம்மாளை அய்யனார் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பழனியம்மாளுக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பழனியம்மாள் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து பழனியம்மாளின் அண்ணன் ராஜ வேலு கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு வசந்தராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டை அடுத்த நல்லூர் குச்சிபாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் ஹேமசந்திரன் (வயது23). இவர் டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதுபோல் நேற்று காலையும் யாருடனோ ஹேமச்சந்திரன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை சேகர் கண்டித்தார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார்.

    தந்தை திட்டியதால் மனமுடைந்த ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை அவரது தாய் கோமதி கடைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் ஹேமச்சந்திரன் தூக்குபோட்டு தொங்கினார்.

    கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கோமதி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹேமச்சந்திரனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×