செய்திகள்
திருமங்கலம் அருகே கூட்டுறவு வங்கி அலுவலர் விஷம் குடித்து தற்கொலை
திருமங்கலம் அருகே கூட்டுறவு வங்கி அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலம் பேரையூர் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட எஸ்.வலையப்பட்டியை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் முத்து (வயது28). இவர் மீனாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வந்த புகாரின்பேரில் உயர் அதிகாரிகள் அனைத்து அலுவலர்களிடமும் விசாரணை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு முத்துவிடமும் விசாரணை நடந்ததாக தெரிகிறது. அன்றிலிருந்து அவர் விரக்தியுடன் இருந்துள்ளார். நேற்று வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்ற முத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.