செய்திகள்
அரசியல் களத்தில் கமலின் சவாலை சந்திப்போம்: முதலமைச்சர் பேட்டி
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்களுக்கு தகுந்த கருத்துக்களால் பதில் அளிப்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவரது எண்ணத்தின் படி நடைபெறும் இந்த அரசு அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி அவரது புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறோம்.
நீட் தேர்வை பொறுத்த வரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழக அமைச்சர்கள் 5 பேர், டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளோம். முடிந்த அளவுக்கு தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அ.தி.மு.க. வை பொறுத்தவரை ஒரே அணி தான். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியதாக பத்திரிகை, ஊடகங்களில் பார்த்தேன், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அவர்களது விருப்பம். தேசிய வங்கிகளில் கடனை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராடுவது அவர்களது விருப்பம்.
மெட்ரோ ரெயில் திட்டம் கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு ஆகும். இந்த மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு நன்னீரில் தான் பரவுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் கமல் திரைப்பட நடிகர். அரசியலுக்கு வரவில்லை, அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்போம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
பின்னர் விமான நிலையத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவரது எண்ணத்தின் படி நடைபெறும் இந்த அரசு அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி அவரது புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறோம்.
நீட் தேர்வை பொறுத்த வரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழக அமைச்சர்கள் 5 பேர், டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளோம். முடிந்த அளவுக்கு தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அ.தி.மு.க. வை பொறுத்தவரை ஒரே அணி தான். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியதாக பத்திரிகை, ஊடகங்களில் பார்த்தேன், ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அவர்களது விருப்பம். தேசிய வங்கிகளில் கடனை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராடுவது அவர்களது விருப்பம்.
மெட்ரோ ரெயில் திட்டம் கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு ஆகும். இந்த மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு நன்னீரில் தான் பரவுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் கமல் திரைப்பட நடிகர். அரசியலுக்கு வரவில்லை, அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்களுக்கு பதில் அளிப்போம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.