செய்திகள்

விழுப்புரத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2017-07-21 17:08 GMT   |   Update On 2017-07-21 17:08 GMT
விழுப்புரத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் பொன்அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி சாந்தி (வயது 50). ராஜாராம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாந்தி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு மாதமாக சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவருடைய வீடு பூட்டியே கிடந்தது.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு சாந்தி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர். இதை நேற்று காலை அந்த வழியாக சென்ற சாந்தியின் உறவினர்கள் பார்த்து உடனே அவருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News