செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குழந்தையை பார்க்க மனைவி அனுமதிக்காததால் வாலிபர் தற்கொலை

Published On 2017-07-15 11:43 GMT   |   Update On 2017-07-15 11:43 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த குழந்தையை பார்க்க மனைவி அனுமதிக்காததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் கோபால் (வயது37). இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. அருண் (2) என்ற மகன் உள்ளான்.

இந்த சூழலில் கோபால் சரியாக வேலைக்கு செல்லாததால் கணவர், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நிர்மலா 3 மாதத்துக்கு முன்பு செங்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார்.

கடந்த 45 நாட்களுக்கு முன்பு தாய் வீட்டில் நிர்மலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் கிடைத்ததும், கோபால் பார்க்கச்சென்றார். ஆனால் குழந்தையை பார்க்க அவர் அனுமதிக்கபடவில்லை என தெரிகிறது.

இதனால் மனவேதனையில் இருந்து வந்த கோபால், வி‌ஷம் குடித்து மயங்கினார். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News