செய்திகள்
விருதுநகர் அருகே 4 வயது மகனுடன் இளம்பெண் மாயம்
விருதுநகர் அருகே 4 வயது மகனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஆனைகூட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது30). இவரது மனைவி அனிதா பாத்திமா (26). இவர்களது மகன் முகமது ஆரீப் (4).
முகமது சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், அனிதா பாத்திமா வீட்டின் அருகே உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையிலும் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று அனிதா பாத்திமா தனது மகன் முகமது ஆரீப்பை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த முகமது, மனைவி- மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், சிறுவனையும் தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள ஆனைகூட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது30). இவரது மனைவி அனிதா பாத்திமா (26). இவர்களது மகன் முகமது ஆரீப் (4).
முகமது சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், அனிதா பாத்திமா வீட்டின் அருகே உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையிலும் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று அனிதா பாத்திமா தனது மகன் முகமது ஆரீப்பை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதட்டம் அடைந்த முகமது, மனைவி- மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், சிறுவனையும் தேடி வருகின்றனர்.