செய்திகள்

வில்லியனூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-07-10 12:25 GMT   |   Update On 2017-07-10 12:25 GMT
வில்லியனூர் அருகே லாரி டிரைவர் வீட்டில் உள்ள மின்விறிசியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன், இவரது மகன் உதயகுமார் (வயது26). இவர் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் நண்பர்களுக்கு செலவழித்து வந்தார். மேலும் பலரிடம் கடன் வாங்கியும் நண்பர்களுக்கு செலவழித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கடன் கொடுத்தவர்கள் உதயகுமார் வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த உதயகுமார் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News