செய்திகள்
விருதுநகர் அருகே பெண்ணிடம் சில்மிஷம்: போலீஸ்காரர் மீது புகார்
விருதுநகர் அருகே போதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக போலீஸ்காரர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள காளப்பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இதில் அவரது உறவினரும் மணிமுத்தாறு பட்டா லியனில் போலீஸ்காரராக பணியாற்றுபவருமான கனகராஜ் என்பவரும் கலந்து கொண்டார்.
அவர் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. போதையில் இருந்த கனகராஜ், விழாவுக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அந்தப்பெண் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் கனகராஜ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அப்பலநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள காளப்பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இதில் அவரது உறவினரும் மணிமுத்தாறு பட்டா லியனில் போலீஸ்காரராக பணியாற்றுபவருமான கனகராஜ் என்பவரும் கலந்து கொண்டார்.
அவர் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. போதையில் இருந்த கனகராஜ், விழாவுக்கு வந்த இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். அந்தப்பெண் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் கனகராஜ், அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அப்பலநாயக்கன்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.