செய்திகள்

கதிராமங்களத்தில் மக்கள் மீது தடியடி: விஜயகாந்த் கண்டனம்

Published On 2017-07-02 08:21 GMT   |   Update On 2017-07-02 08:21 GMT
கதிராமங்களத்தில் ஓ.என்.ஜி.சி. எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வன்மையாக கண்டித்து உள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கதிராமங்களத்தில் விவசாய நிலங்களில் ஓ.என்.ஜி.சி. மூலம் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தின் செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தாக்கி, கைது செய்த காவல் துறையினரை தே.மு.தி.க. வன்மையாக கண்டிக்கிறது.

அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை தண்டிப்பதற்கு பதில். அதில் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை ஆராய்ந்து, என்ன பயன் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக எந்த ஒரு நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

மக்கள் கடுமையாக எதிர்த்து வரும் ஓ.என்.ஜி.சி.யின் இந்த திட்டத்தை கட்டாயமாக கொண்டு வருவதை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News