செய்திகள்

அதிமுகவின் தலைமை யார் என்பதை முதல்வரிடம் கேளுங்கள்: தம்பிதுரை

Published On 2017-06-27 03:42 GMT   |   Update On 2017-06-27 03:42 GMT
அதிமுகவின் தலைமை யார் என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும் என்று அக்கட்சியின் மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில்தான் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளித்தோம். தமிழக அதிமுக தான் ஆட்சி புரிகிறது. பா.ஜ.க. அல்ல.

அதிமுகவின் தலைமை யார் என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும். தலைமைக் கழகம் யார் என்பது மக்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். பொதுக்குழுவால் நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

ஆன்மீக நம்பிக்கையாள் திமுகவினர் கோவில் குளங்களை தூர்வாரி வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஆதரவாக உள்ளது.
Tags:    

Similar News