செய்திகள்
ராஜபாளையத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனமுடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ், இவர் சேத்தூர் கூட்டுறவு வங்கி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கனகரத்தினம் (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ராமலட்சுமி என்ற பெண்ணுடன் பாக்கியராஜூக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கனக ரத்தினத்துக்கும், பாக்கியராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கள்ளத் தொடர்பை கைவிடுமாறு கனகரத்தினம் கூறியதால், பாக்கியராஜ் வீட்டுக்கு வருவதை நிறுத்தினார்.
இதில் மனவேதனை அடைந்த கனகரத்தினம் நேற்று இரவு வீட்டு உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் விசாரணை நடத்தி பாக்கியராஜ், ராமலட்சுமி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளார்.