செய்திகள்

இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி 4 லாரிகளில் 1,52,000 ஆவணம் தாக்கல்

Published On 2017-06-12 07:46 GMT   |   Update On 2017-06-12 07:46 GMT
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சசிகலா அணி சார்பில் 4 லாரிகளில் 1,52,000 பிரமாண பத்திரங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டனர். இதனால் தலைமை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா அணியினரும், ஓ.பி.எஸ். அணியினரும் தலைமை தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.


சசிகலா அணி சார்பில் இதுவரை 3 முறை 3 லட்சத்து 10 ஆயிரம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று 4 வது முறையாக சசிகலா அணி சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம் 1 லட்சத்து 52 ஆயிரம் பிரமாண பத்திரங்களை தேர்தல் கமி‌ஷனில் தாக்கல்செய்தார். இந்த பிரமாண பத்திரங்கள் 4 லாரிகளில் ஏற்றி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News