செய்திகள்

டெல்லி கோர்ட்டில் தினகரன் ஜாமீன் வழக்கு 29-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2017-05-26 08:59 GMT   |   Update On 2017-05-26 08:59 GMT
டெல்லி கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஜாமீன் மனு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

‘இரட்டை இலை’ சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் காவலில் நடந்த விசாரணைக்குப்பின் டி.டி.வி.தினகரன் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருடன் கைதான நண்பர் மல்லிகார்ஜூனாவும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இருவரும் ஜாமீன் கேட்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் அதிகாரி ஆஜராகவில்லை. இதனால் ஜாமீன் மனு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ஜாமீன் மனு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News