செய்திகள்

கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக தமிழக தலைமை செயலாளருடன், ஆந்திர மாநில அதிகாரிகள் சந்திப்பு

Published On 2017-05-13 03:16 GMT   |   Update On 2017-05-13 03:16 GMT
கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக தமிழக தலைமை செயலாளருடன், ஆந்திர மாநில தலைமை செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து பேசினர்.
சென்னை:

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதிநீரை பெற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், ஆந்திர மாநில தலைமை செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் மற்றும் மெட்ரோ குடிநீர் நிர்வாக இயக்குனர், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News