செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கடனை அடைக்க முடியாததால் பெண் தற்கொலை

Published On 2017-04-30 17:23 GMT   |   Update On 2017-04-30 17:23 GMT
ஆண்டிப்பட்டி அருகே மகனின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே டி.சேடபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜம்மாள் (55). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது 3-வது மகன் முத்துராஜ் திருமணத்திற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார்.

கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அதை கேட்க தொடங்கினர். இதனால் அவமானம் அடைந்த ராஜம்மாள் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிசிக்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News