செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் ரூ.27½ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 பயணிகளை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பைசல் கான், மற்றொருவர் சென்னையை சேர்ந்த முகமது பைசல் என்பது தெரியவந்தது. பைசன் கானின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 900 கிராம் தங்கத்தை 9 கட்டிகளாக மறைத்து வைத்து கடத்தி வந்ததும், முகமது பைசல் உடலில் மறைத்து வைத்து 45 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 945 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.27 லட்சத்து 45 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பைசல் கான், முகமது பைசல் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் 2 பயணிகளை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பைசல் கான், மற்றொருவர் சென்னையை சேர்ந்த முகமது பைசல் என்பது தெரியவந்தது. பைசன் கானின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 900 கிராம் தங்கத்தை 9 கட்டிகளாக மறைத்து வைத்து கடத்தி வந்ததும், முகமது பைசல் உடலில் மறைத்து வைத்து 45 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 945 கிராம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.27 லட்சத்து 45 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பைசல் கான், முகமது பைசல் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.