செய்திகள்

அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

Published On 2017-03-24 00:15 GMT   |   Update On 2017-03-24 00:15 GMT
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம் என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர். உருவாக்கிய, ஜெயலலிதாவின் தொடர் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது என்ற உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலுவான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை சட்டப்படி எப்பாடுபட்டாவது மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் கட்சியையும், ஆட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தமிழ் மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் மகிழும் வண்ணம் உறுதியாக மீட்டெடுப்போம்

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

Similar News