செய்திகள்
வியாசர்பாடி ஆட்டோ டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது
வியாசர்பாடி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் அருகே உள்ள மதுக்கடை ஓரம் நேற்று காலை வாலிபர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்டது வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு அவர் செங்குன்றத்துக்கு ஆட்டோவில் சவாரி ஏற்றி வந்துள்ளார். பின்னர் சுரேஷ் பம்மது குளம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்திய போது சிலருடன் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக செங்குன்றம் அம்பேத்கார் நகரை சேர்ந்த ஜமால், மற்றொரு சுரேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.
செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் அருகே உள்ள மதுக்கடை ஓரம் நேற்று காலை வாலிபர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையுண்டது வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு அவர் செங்குன்றத்துக்கு ஆட்டோவில் சவாரி ஏற்றி வந்துள்ளார். பின்னர் சுரேஷ் பம்மது குளம் அருகே உள்ள மதுக்கடையில் மது அருந்திய போது சிலருடன் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக செங்குன்றம் அம்பேத்கார் நகரை சேர்ந்த ஜமால், மற்றொரு சுரேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.