செய்திகள்

வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-09-09 11:41 GMT   |   Update On 2016-09-09 11:41 GMT
வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

வேலூர்:

வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் பார்த்த சாரதி. ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. இவரது மகன் பிரசாத் (வயது 23). தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டான நாகராஜனின் மகள் நந்தினியும் (20) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு நந்தினி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்த போதிலும் காதலில் ஒன்று சேர பிரசாத்தும், நந்தினியும் முடிவு செய்தனர்.

கடந்த 5-ந் தேதி அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

தனது மகள் மாயமானது குறித்து நாகராஜன் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நந்தினியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நந்தினி தனது காதலுடன் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

போலீசார் காதலர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Similar News