செய்திகள்
கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக மீண்டும் ஆலோசனை
சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தினார். தனித்து போட்டியிடலாமா? வேறு கட்சியுடன் கூட்டணி வைக்ககலாமா என ஆலோசித்ததாக தெரிகிறது.