செய்திகள்
அமமுக - அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது: டிடிவி தினகரன்
அமமுக - அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
சென்னை:
சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் கூட்டணி அமையும்.
அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. எங்களது ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதுதான்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அ.ம.மு.க.) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் கூட்டணி அமையும்.
அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. எங்களது ஒரே இலக்கு தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுப்பதுதான்.
இவ்வாறு தினகரன் கூறினார்.