என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- அந்த மோதிரங்களில் ரஹ்மத் சர்க்கார் மற்றும் ரிஸ்வான் 2025 என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
- புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.
ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே கரா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று, ஆரியன் என்ற 13 வயது சிறுவன், கால்களில் மோதிரங்கள் அணிந்த புறா ஒன்றை பார்த்துள்ளான்.
அதை பிடித்த சிறுவன் தனது குடும்பத்தினருக்கு கூறியுள்ளார். குடும்பத்தினர் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.
சாம்பல் நிறத்திலான அந்தப் புறாவின் இறக்கைகளில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருந்தன. அதன் கால்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மோதிரங்கள் கட்டப்பட்டிருந்தன.
அந்த மோதிரங்களில் 'ரஹ்மத் சர்க்கார்' மற்றும் 'ரிஸ்வான் 2025' என்ற வாசகங்களுடன் சில எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
புறாவின் இறக்கைகளில் ஒரு குறிப்பிட்ட வகை முத்திரை குத்தப்பட்டிருந்தது.
இந்தப் புறா பாகிஸ்தானில் இருந்து உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் ரகசியச் செய்திகளைத் தாங்கி வந்ததா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
அண்மையில் சம்பா மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
- அமலாக்கத்துறை சோதனைக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு.
- மம்தா பானர்ஜி சரணடையமாட்டார் என மெகபூபா முப்தி ஆதரவு.
மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி பெண்புலி, அவர் மிகவும் தைரியமானவர். சரணடையமாட்டார் என ஜம்மு-காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும மெகபூபாப முஃப்தி தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவரகாத்தில் மம்தா பானர்ஜிக்கு மெகபூபா முஃப்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை அல்லது பிற புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது, இப்போது நாடு மொத்தமும் அதை அனுபவித்து வருகிறது.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது, சோதனைகள் நடக்கும்போது, மூன்று முதல்வர்களை சிறையில் அடைக்கப்பட்டபோது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் மவுனம் காத்தன. தற்போது இந்த நிலைய நாடு முழுவதும் பார்க்க முடிகிறது. மம்தா பானர்ஜி தைரியமானவர். அவர் பெண் புலி, அவர் திறம்பட அவர்களை எதிர்த்து போரிடுவார், சரணடையமாட்டார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டபோது மெகபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.
- அத்துடன் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரான ஜாவித் ராணா, லடாக் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகுதொலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜாவித் ராணா கூறுகையில் "லடாக் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகு தொலையில் இல்லை என நான் நம்புகிறேன். இதைத் தவிர இந்திய அரசுக்கு மாற்று வாய்ப்பு ஏதுமில்லை.
நீங்கள் (மத்திய அரசு) ஒரு பகுதியை பாகிஸ்தானுக்குக் கொடுத்தீர்கள். கில்ஜித்-பால்டிஸ்தானும் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு லடாக்கைப் பிரித்தீர்கள். இப்போது நம்மிடம் இருப்பது ஜம்மு- காஷ்மீர் மட்டும்தான். இந்த நிலத்தை பிரித்தவர்களே, இப்போது கனக் மண்டியை (ஜம்முவில் உள்ள ஒரு பகுதி) கூட ஒரு மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்" என்றார்.
- பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
- இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நதிநீர் ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவும், பிராந்தியத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்திய அரசு தனது நீர்மின் திட்டங்களை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா 2025-இல் முறைப்படி நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, இந்தப் பணிகள் இன்னும் வேகம் பெற்றுள்ளன.
மத்திய அரசு மற்றும் தேசிய நீர்மின் கழகம் இணைந்து சுமார் 3,000 மெகாவாட்டிற்கு அதிகமான மின் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு பெரிய திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
அதன்படி, பகல் துல் - 1000 மெகாவாட்(MW): செனாப் நதியின் கிளை நதியான மருசுதார் நதியில் அமைகிறது. இது செப்டம்பர் 2026-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராட்லே - 850 MW: செனாப் நதியின் குறுக்கே அமையும் இந்தத் திட்டம் மே 2026-இல் மின் உற்பத்தியைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரு - 624 MW: கிஷ்த்வார் மாவட்டத்தில் அமையும் இத்திட்டம் டிசம்பர் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குவார்- 540 MW: இது 2028-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 2025-இல் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால், நதிநீரைத் தேக்கி வைப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் நீங்கி, இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.
நீண்ட காலத்திற்குப் பிறகு சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்.
அண்மையில் (டிசம்பர் 2025 இறுதியில்), செனாப் நதியில் துல்ஹஸ்தி நிலை-II (260 MW) மற்றும் சவல்கோட் (1,856 MW) ஆகிய பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் தங்களுக்கு வரும் நதிநீர் குறையும் என்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் முறையிட்டு வருகிறது. இருப்பினும், தனது இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களின் அடிப்படையில் இந்தியா பணிகளைத் தொடர்ந்து வருகிறது.
- ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
- நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
பாராமுல்லாவில் உள்ள ஶ்ரீநகர்-பாரமுல்லா-உரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவால் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் வரிசையில் நின்று கொண்டிருந்தன.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது.
- டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் அடங்கிய பையை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. இந்திய வான்பரப்பில் சுமார் 5 நிமிடங்கள் வட்டமடித்த அந்த டிரோன், பை ஒன்றை கீழே வீசியது. டிரோன் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர்.
அந்தப் பையில் தோட்டங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருட்கள், மஞ்சள் நிற டிப்பன் பாக்ஸ் ஒன்றில் ஐ.இ.டி வெடிகுண்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் ஏதேனும் உள்ளதா என தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
- NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும்.
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம் பள்ளாத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் குதிரை ஓட்டியை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் செய்ததாக குற்றம்சாட்டிய இந்தியா, மே 7 ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவதாக தளங்களை தாக்கி அழித்தது.
மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4இல் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகாமையான NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
1597 பக்க குற்றப்பத்திரிகை ஜம்மு NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆறு நபர்கள் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும். இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சதியில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
பயங்கரவாதியாகக் கருதப்படும் சஜித் ஜாட்டைத் தவிர, ஜூலை 29 அன்று ஸ்ரீநகரின் டாச்சிகாமில் இராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் என்ற இருவரின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 22 அன்று கைது செய்யப்பட்டனர்.
- அம்ஜத் பதான் என்ற காவல்துறை அதிகாரி வீரமரணடைந்தார்.
- பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் நேற்று நடந்த மோதலில் ஒரு காவல்துறை அதிகாரி வீரமரணம் அடைந்தார்.
உதம்பூரின் சோஹன் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் முகாம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ராணுவத்தினர் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதைத் தொடர்ந்து போலீசார் பயங்கரவாதிகள் இடையே இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அம்ஜத் பதான் என்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
- ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
- ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
அது ஒரு பரபரப்பான ரெயில் நிலையம். ரெயில் எப்போது புறப்படும் என அதில் உட்கார்ந்திருக்கும் பயணிகளும், சீக்கிரம் ரெயிலைப் பிடிக்க வேண்டுமே என ஓடி வரும் பயணிகளுமாக அந்த ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
எஸ் 4 கோச்சில் அமர்ந்திருந்த கேசவனை வழியனுப்ப வந்திருந்தார் சுதர்சன். வண்டி புறப்பட 20 நிமிடங்கள் இருந்ததால் இருவரும் அங்கிருந்த கேண்டீனில் டீ குடிக்கச் சென்றனர். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த அவர்கள் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பத்திரிகை விற்கும் கடையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் என்ற செய்தியைக் கண்டு வருத்தப்பட்டனர்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பிரச்சனை தீரமாட்டேங்குதே என அங்கலாய்த்தார் கேசவன்.
அப்போது, மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ஆனாலும் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகையே அதிர்ச்ச்யில் ஆழ்த்தியது என வேதனையுடன் தெரிவித்தார் சுதர்சன்.
அவர் கூறியதன் சாராம்சம் இதுதான்:
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.
ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே ஆவர்.
இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றது.

இந்தக் கொடிய தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மந்திரிகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இரு வாரங்களுக்குப் பிறகு மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது என தெரிவித்தார்.

இதைக் கேட்ட கேசவன், யார் ஆட்சியில் இருந்தாலும் குடிமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வாழ வழிவகை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் கேசவன்.
அப்போது ரெயில் புறப்படுவதற்கான சிக்னல் விழுந்ததால் கேசவன் தனது சீட்டில் சென்று அமர்ந்தார். ரெயில் புறப்பட்டுச் சென்றதும் கேசவனை வழியனுப்பிய சந்தோஷத்தில் வீட்டுக்கு திரும்பினார் சுதர்சன்.
- செனாப் ரெயில்வே பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
- சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.
ஸ்ரீநகர்:
வரவிருக்கும் அரையாண்டு தேர்வுக்காக லைப்ரரிக்கு சென்று குறிப்புகள் எடுத்து படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். அப்போது அங்கு வந்த சுமதி டீச்சரைப் பார்த்தான். உடனே, டீச்சர் எப்படி இருக்கீங்க? என்றான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படிடா இருக்கே? எங்கே இந்தப் பக்கம்? என பதில் கூறினார் சுமதி டீச்சர்.
நான் இங்க அடிக்கடி வருவேன் டீச்சர். பேப்பர் மட்டுமின்றி பல புத்தகங்களை எடுத்துப் படிப்பேன். பொது அறிவையும் தெரிஞ்சு வச்சுக்கலாம்னு வந்தேன் என்றான்.
அப்படியா? அப்ப உன்னோட பொது அறிவை சோதிச்சுர வேண்டியதுதான் என்ற டீச்சர், உலகிலேயே உயரமான
ரெயில்வே பாலம் எங்க இருக்கு சொல்லு பார்ப்போம்? என கேட்டார். பதில் தெரியாமல் சுந்தர் முழித்தான்.
இதைக் கண்ட டீச்சர், தெரியலைன்னா பரவாயில்லை. நான் சொல்றேன் கேட்டுத் தெரிஞ்சுக்கோ. உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் இந்தியாவில் தான் இருக்கு தெரியுமா? என புதிர் போட்டார்.
என்ன நம்ம இந்தியாவிலா? எங்க டீச்சர் இருக்கு, அதைப் பத்தி சொல்லுங்களேன் என ஆவலோடு கேட்டான்.
சுமதி டீச்சர் சொன்ன விஷயங்களின் சுருக்கம் இதுதான்:

ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ரெயில்வே பாலம். இந்தப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்து வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி அந்தப் பாலத்தின் மீது தேசியக் கொடியைப் பிடித்தபடி நடந்து சென்றார்.
இது உலகின் மிக உயரமான ரெயில்வே இரும்பு வளைவு பாலம் என்ற சிறப்பைப் பெற்றது.
இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் பாதை திட்டத்தின் முக்கியப் பகுதியாகும்..
இதன்மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகிறது.
சுமார் 15 ஆண்டாகக் கட்டப்பட்ட இந்தப் பாலம் பிரான்சின் ஈபிள் கோபுரத்தைவிட உயரமானது.

நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும் வகையில் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டது என கூறி முடித்தார் சுமதி டீச்சர்.
டீச்சர் சொன்னதைக் கேட்ட சுந்தர், ரொம்ப சந்தோஷம் டீச்சர். இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே. இந்த விஷயத்தை, நமது இந்தியாவின் பெருமையை என் பிரெண்ட்ஸ் கிட்டயும் கண்டிப்பா சொல்லப்போறேன் என்றபடி. அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான் சுந்தர்.
- ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
- காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.
ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.
சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.






