வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
- நாளை (17-ந்தேதி) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ் மாதத்தின் முதல்நாளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.
நாளை (17-ந்தேதி) முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 21-ந் தேதி வரை நடை திறந்து இருக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.