ஆன்மிகம்
ஆனிமாத பிரதோஷத்தையொட்டி மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

ஆனிமாத பிரதோஷத்தையொட்டி மாதேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-08 05:34 GMT   |   Update On 2021-07-08 05:34 GMT
மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆதிமூலவர், மாதேஸ்வரர், நந்தி பெருமான், மற்றும் காசி லிங்கேஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் விஜயேந்திரன், சதீஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

காட்டூர் மகா மாரியம்மன் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ராஜா குருசாமி செய்து இருந்தார்.
Tags:    

Similar News