ஆன்மிகம்
இளம்பிள்ளையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
இளம்பிள்ளையில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இளம்பிள்ளை சந்தைபேட்டையில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 30-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் மாரியம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மேலும் தினமும் இரவு மாரியம்மன், காளியம்மன், விநாயகர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.
நேற்று முன்தினம் காலை சிறப்பு பூஜை, தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம், மாலை காளியம்மன் சக்தி அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கோவிலில் இருந்துதேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் காடையாம்பட்டி பிரிவு ரோடு வழியாக சேலம் ரோட்டில் சென்று இளம்பிள்ளை நகர் முழுவதும் சுற்றி வலம் வந்தது. தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய், பழம், மாலை வழங்கி பூஜை செய்தனர்.
மேலும் உப்பு, மிளகை தேர் மீது வீசியும் வழிபட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் காலை சிறப்பு பூஜை, தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம், மாலை காளியம்மன் சக்தி அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கோவிலில் இருந்துதேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் காடையாம்பட்டி பிரிவு ரோடு வழியாக சேலம் ரோட்டில் சென்று இளம்பிள்ளை நகர் முழுவதும் சுற்றி வலம் வந்தது. தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு பக்தர்கள் தேங்காய், பழம், மாலை வழங்கி பூஜை செய்தனர்.
மேலும் உப்பு, மிளகை தேர் மீது வீசியும் வழிபட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.