ஆன்மிகம்

108 வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம்

Published On 2019-01-23 09:15 GMT   |   Update On 2019-01-23 09:15 GMT
திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த தலம் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது.
திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அரங்கநாதர் திருக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு அழகிய மணவாளன், ரங்கராஜர், நம்பெருமாள் போன்ற பெயர்கள் உள்ளன.

108 வைணவத் தலங்களில் முதன்மையானது இது. 156 ஏக்கர் பரப்பரளவில் உள்ள இந்த ஆலயம் 11 ஆழ்வார்களால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க திருத்தலம் ஆகும். இத்தல மூலவரின் வலது கை திருமுடியை தாங்கிட, இடது கை திருப்பாதத்தை சுட்டிக்காட்ட, தெற்கு திசையான இலங்கையை நோக்கி வீற்றிருக்கிறார்.

21 கோபுரங்கள் கொண்ட இந்த ஆலயத்தில் இருக்கும் கருட பகவான் மேற்கூரையை முட்டும் அளவுக்கு பெரிய உருவத்துடன் அருள்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் 114 நாட்கள் உற்சவங்களும், விழாக்களும் கொண்டாடப்படுகிறது.
Tags:    

Similar News