ஆன்மிகம்
பூச்சப்பரங்களில் நடராஜர்-சிவகாமி அம்பாள் கிரிவலம்
திருப்பரங்குன்றத்தில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் பூச்சப்பரங்களில் அமர்ந்து கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.விழாவையொட்டி நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்குமாக சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. நடராஜ பெருமாளுக்கு “களி” படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமாக “களி” வழங்கப்பட்டது.
பின்னர் பல்லக்கில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட் சியாக இருந்தது.இதனை தொடர்ந்து பூச்சப்பரங்களில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் தனித் தனியாக எழுந்தருளி கோவில் வாசல் முன்பு காட்சி தந்தனர். பின்னர் சன்னதிதெரு, கீழரதவீதி,பெரியரத வீதி வழியே கிரிவல பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.
பின்னர் பல்லக்கில் நடராஜரும், சிவகாமி அம்பாளும் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட் சியாக இருந்தது.இதனை தொடர்ந்து பூச்சப்பரங்களில் நடராஜரும் சிவகாமி அம்பாளும் தனித் தனியாக எழுந்தருளி கோவில் வாசல் முன்பு காட்சி தந்தனர். பின்னர் சன்னதிதெரு, கீழரதவீதி,பெரியரத வீதி வழியே கிரிவல பாதையில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தனர்.