ஆன்மிக களஞ்சியம்

குரு பகவான் தனி சன்னதியில் விளங்கும் திருத்தேன் குடித்திட்டை

Published On 2024-04-30 11:41 GMT   |   Update On 2024-04-30 11:41 GMT
  • இங்கு வியாழ பகவான் தனி சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார்.
  • மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார்.

குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இங்கு வியாழ பகவான் தனி சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார்.

மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார்.

திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார்.

இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட யோகம் தரும் அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tags:    

Similar News