ஆன்மிகம்

முருகனோடு தொடர்புடைய ‘6’

Published On 2018-11-13 08:17 GMT   |   Update On 2018-11-13 08:17 GMT
ஆறு எனும் எண்ணுக்கும், முருகப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர் உண்டு. இது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆறு எனும் எண்ணுக்கும், முருகனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

முருகப்பெருமானின் திருமுகங்கள் ஆறு, அவரை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, ‘சரவணபவ’ எனும் மந்திரத்தின் எழுத்துக்கள் ஆறு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் படைவீடுகள் ஆறு, கந்தர் சஷ்டி விரதம் இருப்பது ஆறு நாட்கள், ஆறாம் நாளில்தான் சூரசம்ஹாரம் வரும்.

முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் என்பது, மாதந்தோறும் வளர்பிறை அல்லது தேய்பிறையில் ஆறாம் நாள் வரும் சஷ்டி திதியாகும்.
Tags:    

Similar News