ஆன்மிகம்

வடமதுரையில் முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா

Published On 2017-08-11 04:17 GMT   |   Update On 2017-08-11 04:17 GMT
வடமதுரை சவுந்தரராஜபெருமாள் கோவில், ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
வடமதுரை சவுந்தரராஜபெருமாள் கோவிலில், கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் கடந்த 5-ந்தேதியும், ஆடித்தேரோட்டம் கடந்த 7-ந்தேதியும் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், இரவு முழுவதும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். அதன்பின்னர் நேற்று அதிகாலை சன்னதியை பெருமாள் அடைந்தார். இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News