ஆன்மிகம்
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் விசேஷ பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், ஆடி மாதத்தில் அனைத்து வெள்ளிக்கிழமைகள், மாதந்தோறும் பவுர்ணமி தினங்கள் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த மாதம் 4-ந்தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்தது. நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உச்சிக்கால பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 4-ந்தேதி இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்தது. நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. உச்சிக்கால பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.