சினிமா

பேட்ட படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

Published On 2018-12-17 04:29 GMT   |   Update On 2018-12-17 04:29 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் சர்வதேச திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #Petta #Rajinikanth
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் சர்வதேச திரையீட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ம்ஸ் கார்பரேஷன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.



முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தின் சில பகுதிகளை கைப்பற்றியிருந்ததாக பார்த்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். #Petta #Rajinikanth

Tags:    

Similar News