சினிமா

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லியான மலையாள நடிகை

Published On 2018-10-24 09:24 GMT   |   Update On 2018-10-24 09:24 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `பேட்ட' படத்தில் மலையாள நடிகை மாளவிகா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். #Petta #Rajinikanth
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பேட்ட. ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து மாளவிகா மோகனன் கூறும்போது,

“ரஜினியுடன் நடிக்க இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த வாய்ப்புக்கு காரணமான அனைவருக்கும் நன்றிகள். அவருடன் நடித்தது எனக்கு ஆச்சரியமாகவும், மிகுந்த மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் பார்த்ததிலேயே அவர் தான் மிக எளிமையானவர்’ எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ் தெரியாததால் பக்கத்திலேயே ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக் கொண்டு நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 



இப்படத்தில் மாளவிகா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிக்கு வில்லி என்பதால் வில்லனாக வரும் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #MalavikaMohanan

Tags:    

Similar News