சினிமா

கேரள மழைவெள்ளம் - நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் நிவாரணம் அறிவிப்பு

Published On 2018-08-17 07:01 GMT   |   Update On 2018-08-17 07:01 GMT
தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். #KeralaRain #KeralaFlood #VijaySethupathi #Dhanush
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பங்குக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் அறிவித்துள்ளார். 



முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா - கார்த்தி ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். விஷால் மற்றும் சித்தார்த் ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #VijaySethupathi #Dhanush

Tags:    

Similar News