சினிமா

கேரள கனமழை - நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சம் நிதியுதவி

Published On 2018-08-17 03:25 GMT   |   Update On 2018-08-17 03:25 GMT
தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Siddharth
கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சித்தார்த் தன் பங்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நான் உனக்கு தைரியம் தருகிறேன், நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன்! என்று குறிப்பிட்டு (#KeralaDonationChallenge) என்ற ஹேஷ்டேக்கில் நீங்களும் கேரளாவுக்கு உதவலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகை ரோஹிணி உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Siddharth

Tags:    

Similar News