சினிமா

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்: `வேலைக்காரன்' படக்குழு திட்டம்

Published On 2017-08-05 08:05 GMT   |   Update On 2017-08-05 08:05 GMT
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்க `வேலைக்காரன்' படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் `வேலைக்காரன்' படத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். `தனிஒருவன்' பட வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது.



அதற்கு முன்னதாக பகத் பாஷில் பிறந்தநாளான 8-ஆம் தேதி படத்தின் இரண்டாவது போஸ்டரும், 14-ஆம் தேதி டீசரும் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தில் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. கைப்பற்றியிருந்தது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் நடித்திருக்கிறார்.
Tags:    

Similar News