சினிமா

கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன்: விஜயலட்சுமி

Published On 2017-07-08 08:24 GMT   |   Update On 2017-07-08 08:24 GMT
கணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன் என விஜயலட்சுமி கூறியுள்ளார். அதுகுறித்த செய்தியை மேலும் விரிவாக பார்ப்போம்...
நடிகை விஜயலட்சுமி தயாரிப்பில் அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் ‘பண்டிகை’. இதில் கிருஷ்ணா- ஆனந்தி, சரவணன், நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதன் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய விஜயலட்சுமி...,

நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்ன போது வீட்டில் அனைவரும் ஆதரவு கொடுத்தார்கள். படம் தயாரிக்க போகிறேன் என்று சொன்னதும் எல்லோரும், ‘ எதுக்கு’ ரிஸ்க் எடுக்கிற... இதெல்லாம் வேண்டாம் என்றார்கள்.

மேலும் ‘என் கணவர் பெரோஸ் மீதும் நம்பிக்கை இருந்ததால் நான் தயாரிப்பாளராக முடிவு செய்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக, பெருமையாக இருக்கிறது.


கிருஷ்ணா இதில் முதல் முறையாக அதிகமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். கதை எழுதும் போதே கயல் ஆனந்தி தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று பெரோஸ் முடிவு செய்துவிட்டார். அவரது வேடம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘பருத்தி வீரன்’ சரவணன் மற்றொரு ஹீரோ போல் நடித்திருக்கிறார்.

இதன் மூலம் படம் தயாரிப்பது எவ்வளவு பெரிய கடினமான வி‌ஷயம் என்பதை தெரிந்து கொண்டேன். படம் எடுத்து முடிந்ததும் ஆராபிலிம்ஸ் மகேஷ் இந்த படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு படத்தை வெளியிடுகிறார். ஒரு கட்டத்தில் இனி படமே தயாரிக்ககூடாது என்று நினைத்தேன். ‘பண்டிகை’ படம் சிறப்பாக வந்திருப்பதை பார்த்த பிறகு இன்னும் 4 படங்கள் தயாரிக்க ஆசைப்படுகிறேன்” என்றார். நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News