சினிமா

தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்

Published On 2017-05-12 11:37 GMT   |   Update On 2017-05-12 11:37 GMT
நடிகை ரம்யாகிருஷ்ணன் குறித்து பரவி வந்த வதந்தி குறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் மகனுடன் சென்னையில் வசிக்கிறார். இவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது. இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், “ கணவர் தெலுங்கு படம் இயக்குவதால் ஐதாராபாத்தில் இருக்கிறார்.

நான் டி.வி. தொடர்களில் நடிக்க வசதியாக சென்னையில் வசிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது கணவர் சென்னை வருவார். அல்லது நான் அங்கு செல்வேன். ஒரே நேரத்தில் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்” என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Tags:    

Similar News