19.2.2024 முதல் 25.2.2024 வரை
விபரீத ராஜயோகம் ஏற்படும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன். புதன், சனி என மூன்று கிரகச் சேர்க்கை. அஷ்டம ஸ்தானம் பலப்பட்டால் மட்டுமே அதிர்ஷ்ட பணம், பொருள் சேரும். அஷ்டமச் சனி ஒரு புறம் இருந்தாலும் அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சை மூலதன மாக கொண்டவர்களின் தனித்திறமை வெளிப்படும். உழைக்கும் ஆர்வம் கூடும். எதிர்பாராத திடீர் தன லாபங்கள் உண்டா கும். கால நேரம் சாதகமாக இருக்கும் போது கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் வருமானம் பல வழிகளில் வந்தடையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நல்ல சம்பவங்கள் நடக்கும். தம்பதிகளுக்கு உறவினர்கள் மூலம் கொடுக்கல், வாங்கலால் ஏற்பட்ட இன்னல்கள் விலகி இல்லறம் நல்லறமாகும். பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம், பாகப் பிரிவினை பணம், சொத்து கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச்சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். மாசிமகத்தன்று சிவனுக்கு புனித நீரால் அபிசேகம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406