1.4.2024 முதல் 7.4.2024 வரை
ஒளிமயமான எதிர்காலம் அமையப் போகிறது. லாப ஸ்தானத்தை நோக்கி குரு நெருங்கிக் கொண்டு இருக்கிறார். குருவின் பார்வை முயற்சி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தில் பதியப்போகிறது. அஷ்டமச் சனியால் ஏற்பட்ட இன்னல்களை குருபகவான் அகற்றப் போகிறார்.ஏற்கனவே சுய தொழில் நடத்துபவர்கள் புதிய தொழில் கிளைகள் துவங்கலாம். பூர்வீக நிலப் பிரச்சினை தீரும். பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். மனைவியால், உடன் பிறந்தவர்களால், தாய்மாமனால் அனுகூலமான பலன்கள் நடைபெறும். வர வேண்டிய கடன் வசூலாகி கொடுக்க வேண்டிய கடனும் ஓடி அடையும்.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தலைக்கு மேல் வந்த பிரச்சினைகள் தலைப்பாகையோடு சென்று விடும். சகலவிதமான தடைகள் விலகி 5.4.2024 அன்று காலை 7.12 முதல் 7.4.2024 அன்று காலை 7.39 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. தேர்தல் நேரம் என்பதால் ரொக்க பணம் கையாள்வதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406